Tuesday, 5 January 2016

சிறுகதை- விலங்குகளை பாதுகாப்போம்

ராமுவும் அவன் குடும்பமும் விடுமுறை நாட்களில் ஈரநிலம் 
இருப்புக்கு சென்றார்கள். பள்ளி ஆசிரியை ஈரநிலம் இருப்புக்கு 
விடுமுறை நாட்களில் செல்ல வேண்டுமென 
கட்டாயப்படுதியதால் குடும்பத்துடன் சென்றனர். அங்கு 
சென்றதும், ராமுவின் தங்கை, ரேவதி, விலங்குகளை கண்டு
அச்சம் அடைந்து, இங்கும் அங்கும் ஓடினாள். ரேவதி ஓடுவதை
கண்டு ராமுவின் தந்தை நிதானப் படுத்த அவள் பின்னால் 
ஓடினார். அப்போது ராமுவும் அவன் தாயாரும் நூழைவுச்சீட்டை வாங்கச் 
சென்றனர். ரேவதியை நிதானப்படுத்தி அவள் தந்தை 
நுழைவாயிலை நோக்கிச் சென்றார்.  அங்கு சென்றதும் ராமுவும் 
அவன் குடும்பமும் ஈரநிலம் இருப்பக்குள் நுழைந்தனர். 
                     
                     


பின் ரேவதி மின்கொத்திகளை பார்க்க வேண்டும் என்ற 
ஆர்வத்துடன் தன் தந்தையுடன் தேட சென்றாள். ராமுவும் அவன் அம்மாவும் நடந்து செல்லும் போது விலங்குகள் பலவற்றைக் காண இயலவில்லை. 
ராமுவின் ஆசிரியர் கொடுத்த திட்டப்பணியின்படி அவன் அவ்விலங்குகள் எவ்வாறு வாழ்கின்றன என்பதை பற்றி அறிய வேண்டும். ஆனால் 
மீன்களை தவிற வேறு எந்த விலங்குகளையும் காண 
இயலாமையால் அவன் வருத்தத்துடன் இருந்தான்தாயார்,விலங்குகள் விடுமுறை காலத்தில் வெப்பநிலை அதிகரித்ததால் ஓய்வு 
எடுத்துக்கொண்டிருக்கலாம் என்று எண்ணி கூறினார்.

   

பின்,ரேவதியும் அவள் தந்தையும் திடீரென்று ஓடி வந்து இருப்பின் இறுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் நம்ப 
முடியாத காட்சியைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொழிற் 
சாலைகள் பல,இருப்பை சுற்றி இருப்பதைக் கண்டனர். மற்றும் 
அத்தொழிற் சாலைகளிலிருந்து வரும் நச்சு புகையை கண்டனர். இருப்புக்கு அருகில் நதி ஒன்றில் பல நச்சு கழிவுகள் 
இருப்பதையும் கண்டனர். தொழிற் சாலைகளிலிருந்து வரும் 
கழிவுகளும் இந்நதியிலேயே கலந்திருப்பதை ராமு கண்டான்.




 பின் பல காண முடியாத விலங்குகள் நச்சுத்தன்மையுடைய 
நதியிலிருந்து குடிப்பதை கண்டு ராமு ஏன் விலங்குகள் இங்கே இருக்கின்றனஎன்பதை தந்தையிடம் கேட்டான். பின் அவர்கள் பல மீன்கள் உயிர் இழந்து போனதை கண்டனர். பின் ராமுவின் வினாவிற்கு தந்தை தொழிற் 
சாலைகளிலிருந்து வரும் நச்சு பொருட்களால் காற்று மற்றும் நிலம் 
மாசடைந்தது.ருப்பினை சரியாக பராமரிக்க தவறியதால் விலங்குகள் 
இங்கு வந்தனர். ராமு பின் இருப்பின் மேலாளரிடம் புகார் செய்ய 
தந்தையிடம் கூறினார். தந்தையும் அதன் படியே செய்தார்.


கதையை தயாரித்தவர்:
பிரியதர்ஷிணி
அக்க்ஷிதா








No comments:

Post a Comment